Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 21 (செப்டம்பர் – 2016 )
வேதாகமப் பகுதி : 1 அரசர்கள் 1-11 வரை

1. தாவீதுக்கு தெரியாமல் தன்னைத்தானே அரசனாக்கிக் கொண்டவன் யார்?
பெனயா
அதோனியா
யோவாபு

2. யார் தாம் போர்த்தியிருந்த புது சால்வையை எடுத்து பன்னிரு துண்டுகளாய்க் கிழித்து, எரொபவாமை நோக்கி ப்த்து குலங்களின் அரசராகப் போகிறார் என்று கூறினார்?
எலிசா
சாலமோன்
அகியா

3. தாவீது எத்தனை ஆண்டுகள் இஸ்ரயேலின் மீது ஆட்சி செலுத்தினான்?
7
20
40

4. யார் யோவாபைக் கொன்று அந்த பழியை சாலமோனின் படைகளின் மேல் போட்டான்?
அகிமா
பெனாயா
கூசி

5. சாலமோன் யாரை மணந்துக் கொண்டான்?
எகிப்து மன்னான பார்வோனின் மகளை
தீரின் மன்னான ஈராமின் மகளை
அபிசாக்கை

6. சாலமோன் எட்சியோன் கெபேரில் என்ன கட்டினார்?
மனைவிகளுக்காக் ஒரு வீட்டை
கூடாரத்தை
கப்பல்களை

7. சாலமோன் எவ்வளவு நீதிமொழிகளை உரைத்தார்?
300
3000
1005

8. யார் சாலமோனைப் பார்த்து, "எங்குள்ளவற்றுள் பாதியைக் கூட அவர்கள் எனக்கு சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதைவிட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன" என்று கூறினார்?
சேபா நாட்டு அரசி
எகிப்து மன்னன் பார்வோன்
தீரின் மன்னன் ஈராமின்

9. எந்த மன்னனிடம் கேதுரு மரங்களை வெட்டித்தருமாறு கேட்டான்?
யோவாபு
எகிப்து மன்னன் பார்வோன்
தீரின் மன்னன் ஈராமின்

10. இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின எந்த ஆண்டு சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத்தொடங்கினார்?
480
400
320

11. சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி என்ன மன்றாடினார்?
இஸ்ரயேல் மக்களின் மீது அருள்
விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக
எதிரிகளை வெற்றிக் கொள்ள

12. கோவிலின் உட்புறத்தை சாலமோன் எதனால் மூடினார்?
பொன்னால்
பித்தளையால்
கேதுரு பலகை

13. கோவிலைக் கட்டி முடிக்க எவ்வளவு ஆண்டுகள் ஆயின?
3
7
13

14. சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்க எவ்வளவு ஆண்டுகள் ஆயின?
13
7
3

15. குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஆண்டவரின் இல்லத்தை எதனால் நிரப்பிற்று?
வானதூதர்களால்
ஒரு மேகம்
ஆண்டவரின் அருளால்




Free counters!