Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 25 (ஜனவரி 2017)
வேதாகமப் பகுதி : குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்

1.நோவாவின் எந்த குமாரனின் வம்சத்தில் ஆபிரகாமும் ஈசாக்கும் தோன்றினார்கள் ?
காம்
யாப்பேத்
சேம்

2.யாருடைய கீரீடம் தாவீதின் தலையில் வைக்கப்பட்டது ?
பாபிலோனின் ராஜா
எகிப்தின் ராஜா
ரப்பாவின் ராஜா

3.அபிசாய், யோவாப், ஆசகேல் ஆகியோர் தாவீதுக்கு என்ன உறவின் முறை?
சகோதரர்கள்
சித்தப்பா/ பெரியப்பாவின் குமாரர்
மருமகன்கள்

4.தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி , உமது கரம் என்னோடிருந்து , தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று ஜெபம் பண்ணியது யார் ?
தாவீது
யாபேஸ்
யாக்கோபு

5.யார் தன் தகப்பனுடைய மஞ்சத்தை தீட்டுப்படுத்தினபடியால் அவனுடைய சேஷ்ட புத்திர சுதந்திரம் யோசேப்பின் குமரருக்கு கொடுக்கப்பட்ட்து ?
ரூபன்
லேவி
மனாசே

6.இஸ்ரவேலரை இலக்கம் பார்த்த தாவீதின் பாவத்தினிமித்தமாய் எத்தனை பேர் மடிந்தார்கள் ?
1,000
70,000
32,000

7.எப்பிராயீம் கோத்திரத்தில் வந்த குறிப்பிடத்தக்க தலைவர் யார் ?
தாவீது
கிதியோன்
யோசுவா

8.சவுல் எந்த கோத்திரத்தான் ?
பென்யமின்
தாண்
யோசேப்பு

9.ஏன் யூதா ஜனங்கள் பாபிலோனுக்கு சிறை பிடித்து கொண்டுபோகப்பட்டார்கள்?
பாபிலோனின் சிறந்த தலைமையினிமித்தம்
பாபிலோனின் சிறந்த ஆயுதங்களினிமித்தம்
யூதாவின் துரோகத்தினிமித்தம்

10.இஸ்ரவேல் புத்திரர் செய்யவேண்டியது இன்னதென்று காலாகாலங்களுக்கு அறிந்து அவர்களுக்கு சொன்னது யார் ?
எப்பிராயீம் மனுஷர்
காத் மனுஷர்
இசக்கார் மனுஷர்

11.பெட்டியை பிடிக்கும் படி தன் கையை நீட்டி ,கர்த்தர் அடித்ததினிமித்தம் செத்தது யார் ?
அபியூ
ஊசா
நாதாப்

12.தாவீது எப்போது யுத்தத்திற்கு போக வேண்டும் என்று எப்படி அறிந்துகொண்டான் ?
முசுக்கொட்டை செடிகளின் நுனிகளில் செல்லுகிற இரைச்சலை கேட்கும்போ
யோவாப் எக்காளம் தொனிக்கும்போது ்
அக்கினி மதில்களை பார்க்கும்போது

13.இரண்டாவது முறையாக கர்த்தருடைய பெட்டியை கொண்டு வந்தது யார்?
ஒரு புதிய ரதம்
ஏர் மாடுகளின் முதுகில்
லேவி புத்திரர் அதின் தண்டுகளுடனே தங்கள் தோள்களில்

14.பெட்டி இருந்த இடம் எந்த அமைப்பில் இருந்தது ?
அறை
கூடாரம்
தாவீதின் வீடு ந்்

15.ஆனுனுக்கு தாவீது தயை செய்ததன் காரணம் என்ன ?
அவனுடைய தகப்பன் தாவீதுக்கு செய்த தயவினிமித்தம்
அவன் சவுலின் வம்சத்தான்
ஆலயத்தை கட்டுவதற்கான மரங்களை கொடுத்ததினிமித்தமாக




Free counters!