Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 26 (பிப்ரவரி 2017)
வேதாகமப் பகுதி : 2 குறிப்பேடு (நாளாகமம்) - 1 முதல் 20 வரை

Select the Bible to continue
1. அனானியின் வார்த்தையைக் கேட்டு, ஆசா என்ன செய்தான்?
அவர் தன்னை தாழ்த்தினார்
அவர் பச்சாதாபம் அடைந்தார்
அனானை சிறையிலிட்டதோடு, மக்களுள் சிலரையும் கொடுமைப்படுத்தினான்.

2. சாலமோனின் குதிரைகள் எங்கிருந்து வந்தவை?
அசரியா
பாபிலோன்
எகிப்து

3. யோசபாத்து தலைவர்களையும், லேவியரையும் எதற்காக அனுப்பினான்?
தசமபாகங்களைச் சேகரிக்க
ஆண்டவரின் திருச்சட்டத்தை அறிவிக்க
லேவியர் பெரிய நகரங்களில் சுற்றி நகரங்களில் வாழ்ந்து வந்தார்கள்

4. சுமை சுமக்க சாலமோன் யாரை ஏற்படுத்தினான்?
நாட்டில் வாழ்ந்து வந்த அன்னியரை
எகிப்தியர்கள்
பாலஸ்தினியர்கள்

5. ஆகாப் மீக்காவை என்ன செய்தான்?
சிறிதளவே அப்பமும் தண்ணீரும் கொடுத்து வந்தான்
சிறையில் அடைத்தான்
A & B

6. எத்தனை ஆசாரியர் எக்காளங்களை ஊதிக் கொண்டிருந்தனர்?
3
12
120

7. ஏன் ஆண்டவரின் சினம் யோசபாத்தின் மேல் விழ இருந்தது?
தீயவனுக்குத் துணை நின்றதற்கும்
ஆண்டவரை வெறுப்பவனோடு நட்புக் கொண்டதற்கும்
A & B

8. சாலமோன் எதனால் தன் அரியணையை உண்டாக்கினார்?
தங்கத்தால்
தந்ததால்
A & B

9. சாலமோன் இஸ்ரயேல் முழுமைக்கும் அரசராக எருசலேமில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்?
10
40
30

10. யார் ரெகபெயாமிடம் வந்து, "உம் தந்தை பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார்; இப்பொழுது நீர் உம் தந்தை சுமத்தின கடினமான வேலையையும் பளுவான நுகத்தையும் எளிதாக்கும்; நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்" என்றான்?
எரொபவாம்
இளைஞர்கள்
குருக்கள்

11. யார் ரெகபெயாமிடம் "நீங்கள் படையெடுத்துச் சென்று, உம் சகோதரருடன் போரிட வேண்டாம். அவரவர் தம் வீட்டுக்குத் திரும்புங்கள்" கூறினது?
எரொபவாம்
செமாயா
முதியவர்கள்

12. ஏன் ரெகபெயாம் தீயன செய்தான்?
ஆண்டவரை நாடுவதில் அவனது உள்ளம் உறுதியாய் இராததால்
அவரது தந்தையின் செல்வாக்கினால்
அவரது தாயின் செல்வாக்கினால்

13. கடவுள் ஏன் அபியா, யூதா முன்பாக எரொபவாமையும் இஸ்ரயேலர் எல்லாரையும் முறியடித்தார்
எரொபவாம் பொன் கன்றுக்குட்டியை வணங்குவதற்காக உண்டாக்கினான்
யூத புத்திரர் தங்கள் பிதாக்களின் தேவனை சார்ந்து கொண்டதினால்
இஸ்ரவேலரிலும் யூதா எண்ணிக்கையில் அதிகமானதினால்

14. எவ்வாறு லேவியர் கடவுளை வாழ்த்தினர்?
உரத்த குரலில்
கைத்தட்டி
ஆடலுடன்

15. ஆசா தன் தாயை 'அரச அன்னை' நிலையிலிருந்து ஏன் நீக்கி விட்டான்?
அவள் விபசாரம் பண்ணியதால்
அருவருப்பான அசேராக், கம்பம் ஒன்றை ஆசாவின் தாய் செய்திருந்தாள்
பொய் கூறியதால்




1.அனானியின் வார்த்தைகளுக்கு ஆசாவின் செயல்பாடு என்ன?
அவன் தன்னை தாழ்த்தினான்
அவன் மனம்திரும்பினான்
அவன் ஞானதிருஷ்டிகாரன்மேல் சினந்து கடும் கோபம் கொண்டு அவனை காவலறையிலே வைத்தான்

2. அநேக குதிரைகளையும் இரதங்களையும் சாலமோன் எங்கிருந்து பெற்றுக் கொண்டான் ?
அசரியா
பாபிலோன்
எகிப்து

3.யோசபாத் லேவியரையும் மற்றவர்களையும் யூதாவின் பட்டணங்களுக்கு ஏன் அனுப்பினான் ?
தசமபாகம் வாங்குவதற்காக
தேவனுடைய சட்டங்களை உபதேசிக்கும்படியாக
அரணான பட்டணத்தை சுற்றி லேவியர் வசித்ததினால்

4.யாரை சாலமோன் சுமைசுமக்கும் வேலையில் அமர்த்தினான் ?
இஸ்ரவேல் தேசத்தில் இருந்த மறுஜாதியர்
எகிப்தியர்கள்
பெலிஸ்தியர்

5.ஆகாப் மிகாயாவுக்கு செய்தது என்ன ?
இடுக்கத்தின் அப்பத்தையும் தண்ணீரையும் சாப்பிடக்கொடுத்தான்
அவனை சிறைச்சாலையில் அடைத்தான்
A & B

6.ஆலைய பிரதிஷ்டையின் போது எத்தனை ஆசாரியர்கள் பூரிகைகளை ஊதினார்கள் ?
3
12
120

7.கர்த்தருடைய கடுங்கோபம் யோசபாத்தின் மேல் வந்தது ஏன் ?
கர்த்தரை பகைக்கிறவர்களை அவன் சிநேகித்தான்
துன்மார்க்கனுக்கு துணை நின்றான்
A & B

8.சாலமோன் எந்த பொருளினால் அவனுடைய சிங்காசனத்தை செய்தான் ?
பொன்
தந்தம்
A & B

9.சாலமோன் எத்தனை வருஷம் அரசாண்டான் ?
10
40
30

10. சாலமோன் சுமத்தின கடினமான வேலையையும் பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்படி ரெகொபெயாமை வேண்டிக்கொண்டது யார் ?
யெரொபெயாம்
முதிர் வயது மனிதன்
ஆசாரியன்

11.நீங்கள் போகாமலும் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணாமலும் அவரவர் தம்தம் வீட்டுக்கு திரும்புங்கள் என்று ரெகொபெயாமிடம் கூறியது யார் ?
யெரொபெயாம்
செமாயா
முதிர் வயது மனிதன்

12.ஏன் ரெகொபெயாம் பொல்லாப்பானதை செய்தான் ?
அவன் கர்த்தரை தேடுகிறதற்கு தன் இருதயத்தை திருப்பவில்லை
அவன் தகப்பனுடைய செல்வாக்கினிமித்தமாக
அவன் தாயின் செல்வாக்கினிமித்தமாக

13. ஏன் தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறியடித்தார்?
யெரொபெயாம் பொன் கன்றுக்குட்டியை வணங்குவதற்காக உருவாக்கினான்
யூத புத்திரர் தங்கள் பிதாக்களின் தேவனை சார்ந்து கொண்டதினால்
இஸ்ரவேலரிலும் யூதா எண்ணிக்கையில் அதிகமானதினால்

14.தேவனை லேவியர் எவ்வாறு துதித்தார்கள் ?
மகா சத்தத்தோடே கெம்பீரமாய்
கைத்தாளங்களோடே
மேளங்களோடும் நடனங்களோடும்

15.ஏன் ஆசா அவனுடைய தாயாகிய மாகாளை அவளுடைய ஸ்தானத்திலிருந்து விலக்கினான் ?
அவள் வேசித்தனத்திற்கு அடிமையானதினால்
தோப்பிலே விக்கிரகத்தை உண்டுபண்ணினபடியால்
அவள் பொய் சொன்னபடியால்





Free counters!