Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 29 (மே 2017)
வேதாகமப் பகுதி : நெகேமியா

1.எந்த இறைவாக்கினர் உரைத்த வார்த்தையை நிறைவேற்றும்படி பாரசீக மன்னர் சைரசு ஆண்டவர் கோவிலைக் கட்டினார் ?
ஆகாய்
ஏசாயா
எரேமியா

2.நேபுகாத்நேசார் எருசலேமிலிருந்து எடுத்து வந்ததாக எதை சைரசு எடுத்து கொடுத்தான்?
ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான பாத்திரம்
தங்க கவசங்கள்
உடன்படிக்கை பெட்டி

3.அடிமைத்தனத்திலிருந்து திரும்பினவர்களில் முதலாவது யார் ?
செருபாபேல்
எஸ்ரா
நெகேமியா

4.அடிமைத்தனத்திலிருந்து வந்த மக்கள் சபை ஏறக்குறைய எவ்வளவு?
1,000
10,000
50,000

5.யெசுவாவும் செருபாபேலும் முதலாவது கட்டியது என்ன ?
உடன்படிக்கை பெட்டி
கடவுளுக்கு பலிபீடம்
சமூகத்து அப்ப மேசை

6.முந்தின ஆலயத்தை கண்ட முதிர்வயதானவர்கள் என்ன செய்தார்கள்?
குரல் எழுப்பினார்கள்
உரத்த குரலில் அழுதார்கள்
பாடினார்கள்

7.எந்த மன்னர் தன்னிடமிருந்து மறு உத்தரவு வரும்வரை யூதர்களின் வேலையை நிறுத்தும்படி கட்டளை பிறப்பித்தான்?
அகாஸ்வேரு
அர்தசஷ்டா
சைரசு

8.எஸ்ரா தேவனுடைய தண்டனையை எவ்வாறு கருதுகிறார்?
தேவனிடத்திலிருந்து வேதனைகள் வரும்
தாங்கக் கூடியதிலும் மேலானவைகள்
குற்றத்திற்கு ஈடாக தண்டியாமல்

9.தத்னாய் வேலையை குறித்து யாருக்கு கடிதம் அனுப்பினான்?
தரியு
அர்தசஷ்டா
சைரசு

10.திரும்பக் கட்டுவதற்கான செலவு எப்படி கொடுக்கப்பட்டது?
அரச வருவாயிலிருந்து
தசமபாகத்திலிருந்து
மனப்பூர்வமான காணிக்கைகளிலிருந்து

11.தரியுவின் வேண்டுதல் என்ன?
மன்னரும் அவரது மைந்தரும் நீடுழி வாழ
பழுது இல்லாமல் ஆலயம் கட்டிமுடிக்கப்பட
மதில்கள் கட்டிமுடிக்கப்பட

12.இஸ்ரவேலர் என்ன உடன்படிக்கை செய்தார்கள்?
தசமபாகம்
தேவனுடைய சட்டங்களை தேடினார்கள்
பஸ்கா ஆசாரித்தார்கள்

13.எஸ்ரா எந்த சந்ததியான்?
ஆரோன்
தானியேல்
தாவீது

14.அகாவா நதியில் எஸ்ரா செய்வித்தது என்ன?
தேவனுடைய செவ்வையான வழியை தேடுவதற்கு உபவாசத்தை கூறினான்
ஜெபம் செய்தல்
பஸ்கா விருந்து

15.தேவனுடைய ஆலயத்திற்கு பொருள்கள் எஸ்ராவிடம் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணையை வழங்கியது யார் ?
அகாஸ்வேரு
அர்தசஷ்டா
சைரசு




1.எருசலேமின் மதில்கள் மற்றும் வாசல்களின் நிலைகளை நெகேமியா எவ்வாறு அறிந்துகொண்டார்?
தேவதூதர்களிடமிருந்து
தரிசனகங்கள் மூலமாய்
அனானி மற்றும் யூதாவின் வேறு சில மனுஷர் மூலமாய்

2.காலமேதொடங்கி மத்தியானமட்டும் மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை உரக்க வாசித்தது யார் ?
எஸ்றா
நெகேமியா
அனானி

3.ராஜாவுக்கு நெகேமியாவின் ஸ்தானம் என்ன ?
பானபாத்திரக்காரன்
உக்கிராணக்காரன்
அப்பம் செய்பவர்

4.அர்தசஷ்டா ராஜா நெகேமியா பற்றி உணர்ந்து கொண்டது என்ன ?
அவர் புத்திசாலி
அவருடைய முகத்தோற்றம் துக்கமாயிருந்தது
கடினமாக வேலை செய்பவராக

5.ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தை என்ன செய்ய , யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்பவேண்டும் என்று வேண்டிக் கொண்டார் ?
கட்டுவதற்க்கு
பார்ப்பதற்க்கு
கணக்கெடுப்பதற்க்கு

6. ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் ________________ விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது
கலைப்பொருட்களை
வரலாறு
நன்மையை

7.கல் மதில் எதினால் இடிக்கப்படும் என தொபியா கூறினான்?
ஒரு நரி
அவர்களுடைய எதிரிகளால்
எருது

8.அலங்கத்தை கட்டுகிறவர்களின் மனப்பான்மை என்ன ?
மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தார்கள்
வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்
அவர்கள் ஆர்வமாய் இருந்தார்கள்

9.அதிகமான வேலையாட்களுக்கு என்ன இடர்பாடு இருந்தது?
ஒரு கையில் ஆயுதம் தரித்த்திருந்தார்கள்
போதுமான ஊதியம் இல்லாமை
குறைவான மேற்பார்வை

10.யுத்தம் பண்ண ஓரிடத்தில் கூடுகிறதற்கு எப்பொழுது வர வேண்டும் ?
சத்தத்தை கேட்கும்போது
எக்காள சத்தம் கேட்கும்போது
செய்தி சொல்லி அனுப்பும் போது

11.சகோதரர்கள் எப்பொழுது தங்கள் வஸ்திரங்களை மாற்றினார்கள் ?
காலையில்
வாரம் ஒருமுறை
துவைக்கும்போது மட்டும்

12.ஏழைகளின் கூக்குரலைக் கேட்ட பிறகு நெகேமியா எதை நிறுத்தினார்?
வட்டியை
வரியை
தசமபாகம்

13.நான் ____________ வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன்?
பெரிய
முக்கியமான
கர்த்தருடைய

14.அவர்களுடைய பெலன் என்ன ?
ஒற்றுமை
ஒரே மனது
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது

15.தோராயமாக எருசலேமுக்கு செருபாபேலோடு திரும்பின ஜனங்கள் எவ்வளவு?
1,000
50,000
25,000





Free counters!