Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 31 (ஜூலை 2017)
வேதாகமப் பகுதி : யோபு




1.ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணுவது எது?
பிகெமோத்
லிவியாதான்
யானை

2.யோபினுடைய கழுதைகள்,ஒட்டகங்கள்,எருதுகள் ,ஆடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டபோது யோபு என்ன செய்தான்?
தேவனை சந்தேகித்தான்
கசப்பானதை பெற்றுக் கொண்டான்
துதித்தான்

3.எந்த மிருகம் தன் வாலை கேதுரு மரத்தை போல நீட்டுகிறது?
பிகெமோத்
யானை
நீர்யானை

4.எங்கிருந்து தேவன் யோபிடம் பேசினார்?
எரிகிற முட்செடி
மேகம்
பெருங்காற்று

5.யோபின் மனைவி அவனிடம் கேட்டது என்ன?
நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ?
நாம் இனி என்ன செய்வது
ஏன் இதெல்லாம் நடந்தது

6.யோபுடைய மூன்று சிநேகிதர் எவ்வளவு காலம் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல் அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்?
ஒரு நிமிஷம் அல்ல
மூன்று நாட்கள்
ஏழுநாள்

7.எந்த காரியம் அவன் மீது வந்ததாக யோபு கூறினான்?
அவன் பயந்த காரியம்
தனிமை
வலி

8.யோபின் மாம்சத்தின் நிலை என்ன?
பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது
தோல் வெடித்து அருவருப்பாயிற்று
அ மற்றும் ஆ

9.பில்தாத் யோபின் வார்த்தைகளை எதனுடன் ஒப்பிட்டு கூறினார்?
நெருப்பு
பலமான காற்று
மரணம்

10.யோபு தேவன் பேரிலுள்ள அவனுடைய நம்பிக்கையை எவ்வாறு வெளிப்படுத்தினான்?
கர்த்தர் என்னை ஆசிர்வதித்தால் என்னில் நம்பிக்கை உருவாகும்
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்
விசுவாசத்தினால் பிழைப்பேன்

11.யோபு தனது சிநேகிதர்களை பற்றி அவர்களிடம் கூறியது என்ன ?
கள்ள தீர்க்கதரிசிகள்
கபடதாரிகள்
அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்

12.உயிர்த்தெழுதலில் யோபின் விசுவாசத்தின் அறிக்கை என்ன?
இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்
நான் எழும்புவேன்
என் மாம்சம் அழிவதில்லை

13.யோபு தன் ஆகாரத்தைப் பார்க்கிலும் எதனை அதிகமாய் காத்துக்கொண்டார்?
குடும்பம்
சிநேகிதர்கள்
தேவனுடைய வார்த்தைகள்

14.யோபு எதனுடன் என்ன உடன்படிக்கை பண்ணினான்?
வீண் வார்த்தைகளுக்கு அவனுடைய செவிகளை சாய்ப்பதில்லை
கண்களோடே உடன்படிக்கைபண்ணின படியால் ஒரு கன்னிகையின்மேல் நினைவாயிருப்பதில்லை
தெய்வபக்தியில்லாத வழிகளில் அவனுடைய கால்கள் நடப்பதில்லை

15.ஏன் எலிகூ அஞ்சி அபிப்பிராயத்தை வெளிப்படுத்தப்பயந்திருந்தான்?
ஏனெனில் அவன் இளவயதுள்ளவன்
ஏனெனில் அவன் கல்வியில் குறைவுள்ளவன்
ஏனெனில் அவன் பேசும் திறன் கொண்டவன் அல்ல





Free counters!