Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 39 (மார்ச் 2018)
வேதாகமப் பகுதி : சபைஉரையாளர் - பிரசங்கி

1. சிறுவனைக் ___________ மறக்காதே. அவனை நீ பிரம்பால் அடித்தால் அவன் சாகமாட்டான்
கண்டிக்க
ஒழுக்கமாக்க
போதியாமல்

2. _________ சிந்தனை பாவமாகும். புறங்கூறுபவன் மனிதருக்கு வெறுப்பைத் தருவான்
பொறாமையுள்ளவனின்
மதியீனனின்
வெறுக்கத்தக்கவனின்

3. உன் பகைவன் _________ நீ மகிழ வேண்டாம். அவன் அழிவுறும்போது நீ மனத்தில் அக்களிக்க வேண்டாம்.
வியாதிபடும்போது
விழும்போது
பிடிக்கப்படும்போது

4. _________ வெள்ளிக் கட்டில்களில் உள்ள தங்க மாதுளம் பழங்கள் போலாம்.
நல்ல செயல்
ஞானமான முடிவு
வார்த்தையைத் தக்க காலத்தில் பேசுகிறவன்

5. ஒருவேளை அயலான் ______________ உன்னைப் பகைக்காதபடி நீ அவனுடைய வீட்டினின்று உன் காலை விலக்கு
கோபமுற்று
சலித்து
தொந்தரவுற்று

6.துயர நாளில் அயோக்கியனை நம்புவது புழுத்த ______________களைத்த காலையும் நம்புவது போலுமாம்
முழங்கையையும்
காலையும்
பல்லையும்

7. வாடைக் காற்று மழையையும், துக்கமுகம் ______________ நாவையும் சிதறடித்துவிடும்.
புறணி பேசும்
வீண் பேச்சு பேசுகிற
பொய் பேசுகிற

8. மதியீனத்தை மீண்டும் செய்யும் அவிவேகி, தான் ______________.... மீண்டும் வரும் நாய்க்கு ஒப்பாவான்
உணவுக்கு
வீட்டுக்குbr> கக்கினதற்கு

9. பொறுமையற்ற வழிப்போக்கன், தன்னைச் சாராத சண்டையில் கலக்கிறவன் (ஆகியோர்) நாயைக் ______________ பிடிக்கிறவனுக்கு ஒப்பாவர்.
காதால்
காதால்
வாயால்

10. விறகு குறைந்துபோனால் நெருப்பும் அவியும். ______________.. அகற்றி விட்டால் சச்சரவுகளும் அமரும்
கோள் சொல்லுகிறவனை
வெறுக்கிறவனை
பெருமையுள்ளவனை

11. ______________ பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்
அழகான
நேர்மையான
வல்லமையுள்ள

12. உன் வாயல்ல, வேறோருவனே - உன் உதடுகளல்ல, அன்னியனே - உன்னை ______________
பதில்கூறட்டும்
சரிசெய்யட்டும்
புகழ்வானாக

13. உள்ளரங்க நேசத்தைவிட வெளியரங்கக் கண்டனமே அதிக நல்லது.பகைவனின் வஞ்சக ______________காட்டிலும் நண்பன் தரும் காயங்களே அதிக நலமானவை
முத்தங்களைக்
துதிகளை
அடிகளை

14. மற்றவர்கள்மேல் பொறாமைப்பட்டுத் தானே செல்வனாக ______________ மனிதன் தனக்கே வறுமை வருமென்பதை அறியான்
ஏமாற்றுகிற
விரும்புகிற
முயலுகிற

15. ______________ பொய்யும், எழில் வீணுமாம். ஆண்டவருக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
அழகும்
புகழ்ச்சியும்
அறிவும்




1. சாலமோன் எந்த சுழற்சியை விளக்கவில்லை?
ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது
சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது
வசந்த காலம், கோடை காலம்,இலையுதிர்காலம், குளிர்காலம்

2. பூர்வகாலங்களில் செய்யப்பட்டவை பின்னும் செய்யப்படுவது ஏன்?
முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை
பூர்வகாலங்களின் செயல்களை போதிக்கும் போதனையாளர்கள் குறைவு
ஜனங்கள் பூர்வமானவைகள் மறுபடியும் திரும்ப விரும்புவதனால்

3. பிரயாசப்பட்டு சம்பாத்தித்தவைகளை எல்லாம் சாலமோன் வெறுக்க ஆரம்பித்தது ஏன்?
பின்வரப்போகிறவனுக்கு அதை வைத்துப்போகவேண்டியதாகுமே அவன் மூடனாயிருப்பானோ
ஏனெனில் பூச்சிகள் அதை தின்றுவிடும்
ஏனெனில் எல்லாம் துரு

4. காலங்கள் சம்பந்தமாக சாலமோன் குறிப்பிடாதவை என்ன ?
பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு
தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு
தூங்க ஒரு காலமுண்டு தூக்கத்திலிருந்து எழ ஒரு காலமுண்டு

5. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம் ஏன்?
ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்
அவர்கள் திட்டமிடுதலில், இருவர் மேலானது
பிரயாணப்படுகையில், தனிமையை தவிர்க்கலாம்

6. தேவாலயத்துக்குப் போகும்போது என்ன செய்ய வேண்டும்?
மூடர் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வது.
ஆராதிக்க ஆயத்தமாகுதல்
துதியின் பலியை கொண்டு செல்லுதல்

7. எவ்வாறு மூடனை அறிந்துகொள்ளலாம்?
அவனுடைய நண்பர்களினிமித்தம்
வார்த்தைகளின் திரட்சியினால்
தேவன் இல்லையென்று சொல்வதினால்

8. எதை செலுத்துவதில் தாமதம் பண்ணக்கூடாது?
வாங்கியவைகளை
காணிக்கைகளை
தேவனுக்கு பொருத்தனைகளை

9. வேலைசெய்கிறவனுக்கு எது இன்பமாயிருக்கும்?
உணவு
கூலி
நித்திரை

10. ஆசையை விட நலமானது எது?
கண் கண்டது
மகிழ்ச்சி
வாக்குத்தத்தங்கள்

11. பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நல்லது எது?
நற்கீர்த்தி
புகழ்
அறிவு

12. சாவிலும் அதிக கசப்பு எது ?
மோசமான ஆலோசனை
கடுமையான பானம்
கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமுடைய ஸ்திரீ

13.மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது ஏன்?
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால்
அவர்களது ஆசை
அவர்கள் தேவனுடைய வார்த்தையை அறியாதவர்கள்

14. எல்லாவற்றிற்கும் உதவுவது எது?
அறிவு
பணம்
வல்லமை

15. வாலிபப்பிராயத்திலே மனுஷன் செய்ய வேண்டியது என்ன?
தண்ணீர் ஞானஸ்நானம்
அவனுடைய சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்
பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும்





Free counters!