Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 5 (மே 2015)
வேதாகமப் பகுதி : விடுதலை பயணம் 31 முதல் 40 வரை மற்றும் லேவியர் 1 முதல் 10 வரை

1. குருக்களுக்கான ஒழுங்குமுறைகள் எவை?
சந்திப்பு கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை இரசத்தையோ மதுவையோ குடிக்கக்கூடாது.
தீட்டுள்ளதற்கும்,தீட்டற்றதற்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய வேண்டும்
எல்லா சட்டங்களையும் மக்களுக்கு போதிக்க வேண்டும்

2. மார்புப் பட்டையில் நான்கு வரிசையில் மூன்றுமூன்றாக பதிக்கப் பட்ட கற்கள் எதுக்கு அடையாளமாக அமைந்திருந்தது?
பன்னிரண்டு கற்களை குறிக்கும் அடையாளமாக இருந்தது
கலை வேலைப்பாட்டை குறிப்பதாக அமைந்திருந்தது
இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்ப பன்னிரண்டு பெயர்களுக்கு அடையாளமாக அமைந்திருந்தது

3. நல்லுறவுப் பலியின் நன்றிக்கடனாக எவற்றை செலுத்தவேண்டும்?
இறைச்சி
எண்ணெயில் தோய்த்த நெய்யப்பங்கள்
பூசிய புளிப்புள்ள அடைகள்

4. "சாபாத்து" என்றால் என்ன?
ஓய்வு நாள்
தலைமுறைதோறும் அடையாளம்
ஆண்டவருக்கு புனிதமான நாள்

5. கழுதையின் தலையீற்றுக்கு ஈடாக எதைக்கொடுத்து அதை மீட்க வேண்டும் என்று ஆண்டவர் கட்டளையிடுகிறார்?
வெள்ளாடு
செம்மறிக்குட்டி
செம்மறி ஆடு

6. ஒருவர் தனது குற்றப்பழியை அகற்ற ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதிருந்தால் அதற்கு பதிலாக எதை செலுத்தலாம்?
இரு காட்டுப்புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ செலுத்தலாம்
இருபதுபடி அளவு மிருதுவான மாவு
ஈட்டுத்தொகை

7. நாதாபு,அபிகூ ஆகியோரை நெருப்பு விரைந்தெழுந்து அவர்களை விழுங்கியது ஏன்?
ஆண்டவர் திருமுன் பாவம் செய்ததால்
ஆண்டவர் கட்டளைக்கு எதிராக தூப கலசத்தில் நெருப்பை கொண்டு சென்றதால்
மக்களுக்கு எதிராக செயல்பட்டதால்

8. ஆண்டவர் தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கை ஏன் செய்யாது விட்டார்?
மோசேயின் வேண்டுதலினால் தம் எண்ணத்தை ஆண்டவர் மாற்றிக்கொண்டதால்
வஞ்சகமாய் ஆண்டவர் தம் மக்களை கூட்டிக் கொன்றார் என்று எகிப்தியர் சொல்வார்கள் என்பதால்
ஆபிரகாம்,ஈசாக்கு,இஸ்ரயேலை நினைத்தருளியதால்

9. திருநிலைப்பாட்டு நாள்கள் முடியும்வரை எத்தனை நாள்கள் சந்திப்பு கூடார நுழைவாயிலை விட்டு நீங்காமல் இருக்கவேண்டும்?
14 நாள்கள்
8 நாள்கள்
7 நாள்கள்

10. எந்த துயரச்செய்தியை கேட்டபொழுது மக்கள் அழுது புலம்பி எந்த அணிகலன்களையும் அணிந்துக்கொள்ளவில்லை?
நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள்
உங்களை அழித்தொழிக்கப்போகிறேன்
வழியில் உங்களை கொன்று பாலும்,தேனும்,பொழியும் நாட்டுக்கு அழைத்து செல்லமாட்டேன்

11. மக்கள் எதைக்கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர்?
ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றிய பொழுது
ஆண்டவரின் முன்னிலையில் இருந்து நெருப்பு புறப்பட்டு வந்து எரிபலியையும்,கொழுப்பையும்,விழுங்கிய பொழுது
ஆரோன் தன் கைகளை மக்களுக்கு நேராக உயர்த்தி ஆசி வழங்கிய பொழுது

12. தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யும்படி ஆண்டவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்கள் யார்? யார்?
மோசேயும்,ஆரோனும்
திருப்பொழிவு பெற்றவர்களும்,இஸ்ரயேல் மக்களும்
பெட்சலேல்,ஒகொலியாபும்

13. ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி பாவம் செய்தால் அப்பாவத்தை போக்கும் பலியாக எதை பலியிட வேண்டும்?
ஓர் இளங்காளை
ஆட்டுக்கிடா
வெள்ளாட்டு பெண்குட்டி

14. சந்திப்பு கூடாரத்தின் திருவுறைவிடத்தில் திருத்தூயகத்திரையை தொங்கவிட்டு எதை மறைத்து வைத்தார்கள்?
பொன்பலிபீடம்
உடன்படிக்கைப் பேழை
எரிபலிபீடம்

15. சந்திப்புக் கூடார நுழைவாயிலில் பணியாற்றும் பெண்கள் கொண்டுவந்த கண்ணாடிகளைக் கொண்டு என்னென்ன செய்தார்கள்?
எரிபலிபீடம்
தூப பீடம்
வெண்கல நீர்த்தொட்டி மற்றும் வெண்கல ஆதாரத்தையும் செய்தனர்




Free counters!