Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 56 - ஆகஸ்ட் 2019
வேதாகமப் பகுதி : செப்பனியா && ஆகாய்

1. எந்த யூதா ராஜாவின் காலத்தில் செப்பனியா தீர்க்கதரிசனம் சொன்னார்?
ஆகாஸ்
எசேக்கியா
ஜோசியா
யோதாம்
ரெகொபெயாம்

2. எருசலேமில் ஆண்டவர் யாரை தண்டிப்பார்?
'ஆண்டவர் நன்மையும் செய்யார்; தீமையும் செய்யார்' என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன்
பெருமைமிக்க மக்களை
அவிசுவாசிகளை
துன்மார்க்கரை
மேற்கூறிய அனைத்தும்

3. ஆண்டவரது சினத்தின் நாளில் மக்களை எவை காப்பாற்றா?
பொன்னும்
மலைகள்
பாறைகள்
வெள்ளியும்
A & D

4. ஆண்டவரது கோபம் வரும் நாளுக்கு முன்பு ஒரு தேசம் என்ன செய்ய வேண்டும்?
தங்களை தாழ்த்த வேண்டும்
நேர்மையை நாட வேண்டும், மனத்தாழ்மையைத் தேட வேண்டும்
அனைவரும் ஆண்டவரைத் தேட வேண்டும்
மேற்கூறிய அனைத்தும்
B & C

5. ஆண்டவர் காலைதோறும் என்ன செய்கிறார்?
அவர் விழிக்கிறார்
அவர் தமது தீர்ப்பை வழங்குகின்றார்
அவர் தம் நன்மைகளால் நம்மை நிரப்புவார்
அவர் தனது வாக்குறுதிகளை நினைவில் கொள்கிறார்
அவர் தனது வாக்குறுதிகளை நினைவில் கொள்கிறார்

6. ஆண்டவர் என்ன திட்டமிட்டுள்ளார்?
யூதர்களை மீண்டும் எருசலேமுக்கு கூட்டி சேர்ப்பார்
அவர் குற்றம் சாட்டுவதற்கு வேற்றினத்தாரை ஒன்று சேர்ப்பார்
அவருடைய ஆவியை எல்லா மாம்சத்திலும் ஊற்றுவார்
யூதர்களுடனான அவருடைய உடன்படிக்கையை புதுப்பிப்பார்
வெட்டுக்கிளிகள், இளம் வெட்டுக்கிளிகள், கம்பளிப்பூச்சிகள் மற்றும் துள்ளும் வெட்டுக்கிளிகள் சாப்பிட்ட ஆண்டுகளை மீட்டெடுப்பார்

7. ஆண்டவர் சீயோனை எவ்வாறு திரும்ப உயர்த்துவார்?
அவர்கள் கண்முன்பாகவே அவர்களின் முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவார்
அவர்களின் எதிரிகள் கண்முன்பாகவே உயர்த்துவார்
அவர்களின் அக்கிரமங்களை மன்னித்து உயர்த்துவார்
மேற்கூறிய அனைத்தும்
A & C

8. எந்த மன்னனின் ஆட்சியின் போது ஆகாய் தீர்க்கதரிசனம் உரைத்தார்?
அகாஸ்வேரு
சைரஸ்
தாரியு
நெபுகாத்நேசர்
மேற்கூறிய எதுவும் இல்லை

9. மக்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆண்டவர் கட்டளையிடுவதெல்லாம் நாம் செய்வோம்
பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்
ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை
நாங்கள் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு செய்துள்ளோம்
மேற்கூறிய எதுவும் இல்லை

10. ஆகாய் மூலம் ஆண்டவர் என்ன கேட்டார்?
எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கக் போகிறீர்கள்?
இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள்மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா?
நீ என்ன காண்கிறாய்?
நீ இங்கே என்ன செய்கிறாய்?
மேற்கூறிய எதுவும் இல்லை

11. ஆண்டவர் எதை நினைத்து கொள்ளும்படி கேட்டார்?
திருத்தம் செய்
அவர்களின் கற்பனைகளை
அவர்களின் எண்ணங்களை
அவர்களின் துன்மார்க்கத்தை
மேற்கூறிய எதுவும் இல்லை

12. ஆண்டவர் வறட்சியால் வாடுமாறு ஏன் செய்தார்?
ஏனெனில், ஆண்டவரின் இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டைக்கட்டுவதிலேயே கருத்தாய் இருந்தார்கள்
ஏனென்றால் அவர்கள் பஸ்காவை கடைப்பிடிக்கவில்லை
ஏனென்றால் அவர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை
ஏனென்றால் அவர்கள் தசமபாகம் செலுத்தவில்லை
B, C & D

13. கோவில் தொடர்பாக செருபாபேல் மற்றும் யோசுவாவிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன?
இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா?
இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது?
இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாததுபோல் தோன்றுகிறது அல்லவா?
மேற்கூறிய அனைத்தும்
A & C

14. கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி எப்படி இருக்கும் என்கிறார் ஆண்டவர் ?
சமமாக இருக்கும்
மிகுதியாய் இருக்கும்
குறைவாக இருக்கும்
சிறியதாக இருக்கும்
C & D

15. ஆண்டவர் வேற்றினத்து அரசுகளை என்ன செய்யப் போகிறார்?
அவர்களை அடிமைத்தனத்திற்கு கொண்டு வருவார்
அவர்களை மாற்றுவார்
அவர்கள் வலிமையை ஒழிப்பார்
அவர்களை சிதறடிப்பார்
மேற்கூறிய எதுவும் இல்லை





Free counters!