Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 57 - செப்டம்பர் 2019
வேதாகமப் பகுதி : செக்கரியா 1 - 7

1. செக்கரியா எந்த ராஜாவின் ஆட்சிக்காலத்தில் அருள்வாக்கு உரைத்தார்?
அகஸ்வேர்
சைரசு
தாரியு
நெபுகத்னேசர்
மேற்கூறிய எதுவும் இல்லை்

2. ஆண்டவர் எத்தனை வருடங்கள் யூதாவின்மேல் சினத்தை காட்டினார்?
70
14
7
400
430

3. எருசலேமில் கட்டப்படும் என்று ஆண்டவர் சொன்னது என்ன?
ஒரு ராஜ்யம்
ஒரு பலிபீடம்
ஆண்டவரின் வீடு
ஒரு கூடாரம்
மேற்கூறிய எதுவும் இல்லை

4. தரிசனத்தில் வந்த மனிதன் கையில் என்ன வைத்திருந்தான் ?
அளவு நூல்
தூக்கு நூல்
ஒரு தடி
ஏழு மெழுகுவர்த்திகள்
மேற்கூறிய எதுவும் இல்லை

5. சீயோனைத் தொடுகிறவர்கள் எதைத் தொடுகிறார்கள்?
ஆண்டவரின் அருள்பொழிவு பெற்றவர்களை
ஆண்டவரின் வசிப்பிடத்தை
ஆண்டவரின் புனிதமான நிலத்தை
ஆண்டவரின் கண்மணியை
மேற்கூறிய எதுவும் இல்லை

6. ஆண்டவரின் தூதர் முன்னிலையில் யார் நின்றுகொண்டிருந்தார்?
தலைமைக் குருவாகிய யோசுவா
குற்றம் சாட்டுவதற்கு அவரது வலப்பக்கத்தில் சாத்தான்
செக்கரியா
மேற்கூறிய அனைத்தும்
A & B

7. ஆண்டவரின் தூதர் சாத்தானை நோக்கி என்ன கூறினார்?
என் கண்முன் நில்லாதே சாத்தானே
என் உழியன் செக்கரியாவை பார்த்தாயா?
ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக!
நீ இங்கே என்ன செய்கிறாய்?
மேற்கூறிய எதுவும் இல்லை

8. ஆண்டவர் என்ன தோன்றுமாறு செய்வேன் என்றார்?
ஆண்டவரின் அருள்வாக்கினர்
தளிர் எனப்படும் ஊழியன்
கடவுளின் ஆட்டுக்குட்டி
மேற்கூறிய அனைத்தும்
B & C

9. ஆண்டவரின் வார்த்தை சகரியாவுக்கு சொன்ன அருளியவாக்கு என்ன?
உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல: ஆனால் எனது ஆவியாலே ஆகும்
ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்: நீங்கள் அமைதியாயிருங்கள்
நீ இங்கே என்ன செய்கிறாய்?
உன் கையில் இருப்பது என்ன?
மேற்கூறிய எதுவும் இல்லை

10. ஆண்டவருடைய கோவிலுக்கு அடித்தளம் போட்டு அதை முடிப்பவர் யார்?
எஸ்ரா
நெகேமியா
செக்கரியா
செருபாபேல்
மேற்கூறிய எதுவும் இல்லை

11. எதை அவமதிக்கக்கூடாது?
அனாதைகள்
ஏழை
வேலை தொடங்கிய நாளை
விதவைகள்
A, B & D

12. இந்த அதிகாரத்தின் முதல் பகுதியில் செக்கரியா என்ன கண்டார்?
ஒரு செருபீம்
பறக்கும் ஏட்டுச்சுருள்
தூக்கு நூல்
சக்கரத்துக்குள் வேறொரு சக்கரம்
மேற்கூறிய எதுவும் இல்லை

13. இரு மலைகளுக்கு இடையிலிருந்து வந்த குதிரைகள் என்ன?
நான்கு தூதர்கள்
நான்கு பெரியவர்கள்
நான்கு பாதிரியார்கள்
வானகத்தின் நாற்றிசைக் காற்றுகள்
மேற்கூறிய எதுவும் இல்லை

14. யார் தலையில் முடி சூட்டவேண்டும்?
எஸ்ரா
யோசதாக்கின் மகனான யோசுவா
நெகேமியா
செக்கரியா
செருபாபேல்

15. படைகளின் ஆண்டவர் கூறுவது என்ன?
நேர்மையுடன் நீதி வழங்குங்கள்
ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்
கைம்பெண்ணையோ, அனாதையையோ, அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்
உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத் தீமை செய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம்
மேற்கூறிய அனைத்தும்





Free counters!