Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 58 - அக்டோபர் 2019
வேதாகமப் பகுதி : செக்கரியா 8 - 14

1. ஆண்டவர் எதை வெறுக்கிறார்?
விபச்சாரம் செய்தல்
ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்
பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்
மேற்கூறிய அனைத்தும்
B & C

2. இந்த அதிகாரத்தில் எந்த நாடுகளுக்கு எதிராக ஆண்டவரின் வாக்கு எழும்புகிறது?
ஆமாத்து
தீரு
சீதோன்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

3. இளவேனில் காலத்தில் ஆண்டவரிடம் எதற்காக மன்றாடவேண்டும்?
மழைக்காக
தங்குமிடத்திற்காக
சூரிய ஒளிக்காக
வெதுவெதுப்பிற்க்காக
மேற்கூறிய எதுவும் இல்லை

4. ஆண்டவர் தான் எடுத்த கோல்களை எப்படி அழைத்தார்?
ஒன்றிப்பு
இனிமை
கிளை
மேற்கூறிய அனைத்தும்
A & B

5. யூதாசு இஸ்காரியோத்து நிறைவேற்றியதாக சகரியா என்ன தீர்க்கதரிசனம் சொன்னார்?
அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.
அவர்களின் பாசறை பாழாவதாக! அவர்களின் கூடாரங்களில் ஒருவனும் குடிபுகாதிருப்பானாக!
அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள்.
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

6. எருசலேமில் காலூன்றி நிற்க வலுவில்லாதோர் யாரைப் போல இருப்பார்கள் ?
காலேபு
யோசுவா
மோசே
சிம்சோன்
மேற்கூறிய எதுவும் இல்லை

7. எருசலேமுக்கு எதிராக வரும் வேற்றினத்தார் அனைவரையும் ஆண்டவர் என்ன செய்வார்?
அழிக்க வகைதேடுவார்
அவர்களுக்கு எதிராக போராடுவார்
ஆலங்கட்டி மழை பொழியச்செய்வார்
பின்னிட்டு திரும்ப பண்ணுவார்
மேற்கூறிய எதுவும் இல்லை

8. எருசலேமில் வசிப்பவர்கள் யாரை உற்றுநோக்குவார்கள்?
தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்
அவர்களின் ராஜாவை
அவர்களின் மேசியாவை
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

9. தாவீதின் குடும்பத்தாருக்கு என்ன தோன்றும் ?
வாய்ப்பின் கதவு
பாவத்தையும் தீட்டையும் நீக்கித் தூய்மையாக்கும் நீரூற்று
கீழ்வாயில்
களஞ்சியசாலைகள்
மேற்கூறிய எதுவும் இல்லை

10. சகரியாவில் எந்த சொற்றொடரில் இயேசுவை குறிப்பிடுகிறார்?
இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்
மானிட மகன் பல துன்பங்கள் படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டும்
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
ஆயனை வெட்டு: அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்:
மேற்கூறிய எதுவும் இல்லை

11. ஒலிவமலையில் என்ன நடக்கும்?
ஒரு எரிமலை வெடிப்பு உண்டாகும்
பாழாகி விடும்
நெருப்புப்பொறி தெறிக்கும்
மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும்
மேற்கூறிய எதுவும் இல்லை

12. எருசலேமிலிருந்து என்ன தோன்றும்?
நெருப்பு
வீரர்கள்
புகை
காட்டு மிருகங்கள்
மேற்கூறிய எதுவும் இல்லை

13. ஆண்டவரைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது?
அந்நாளில் ஆண்டவர் ஒருவர் மட்டுமே இருப்பார்: அவர் திருப்பெயர் ஒன்று மட்டுமே இருக்கும்.
ஆண்டவர் உலகம் அனைத்திற்கும் அரசராய்த் திகழ்வார்
ஆண்டவர் பெரியவர், புகழப்பட வேண்டியவர்
மேற்கூறிய அனைத்தும்
A & B

14. எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுத்த எல்லா மக்களினங்களையும் ஆண்டவர் எப்படி வதைப்பார்?
அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவனது சதையும் அழுகிப்போகும்.
அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகிப்போகும்
நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகி விடும்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

15. குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் என்ன இருக்கும்?
ஆண்டவருக்கென அர்ப்பணிக்கப்பட்டவை என்று எழுதப்பட்டிருக்கும்
ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள் ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்
எல்லாம் வல்ல இறைவன்
மேற்கூறிய எதுவும் இல்லை





Free counters!