Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 59 - நவம்பர் 2019
வேதாகமப் பகுதி : மலாக்கி

1. ஆண்டவர் யாரை வெறுத்தார்?
அப்சலோம்
அமலேக்கு
ஏசா
யாக்கோபு
நாதாபு

2. ஆண்டவருடைய பெயர் எங்கே புகழ்மிக்கதாக இருக்கும்?
வடக்கிலிருந்து தெற்கு வரை
கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை
எருசலேமில்
சீயோனில்
கடல் தீவுகளுக்களில்

3. ஒரு குருவின் உதடுகள் என்ன செய்ய வேண்டும்?
ஆண்டவரை எக்காலமும் போற்ற வேண்டும்
மெய்யறிவைக் காக்க வேண்டும்
ஆண்டவருடைய வார்த்தையை அறிவிக்க வேண்டும்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

4, மலாக்கி என்ன கேட்டார்?
நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ?
நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ?
பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

5. ஒருவர் தனது இளமையின் மனைவியுடன் எப்படி நடந்து கொண்டார் ?
வெறுப்புபோடு நடந்து கொண்டார்
தயவாய் நடந்து கொண்டார்
அன்போடு நடந்து கொண்டார்
நம்பிக்கைத் துரோகம் செய்தார்
மேற்கூறிய எதுவும் இல்லை

6. ஆண்டவரை எவ்வாறுச் சோர்வடையச் செய்யாதீர்கள் என்றார்?
தீச்செயல் புரிவோர் அனைவரும் ஆண்டவர் கண்ணோக்கில் நல்லவரே, என்றபோது
நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, 'ஆண்டவரே, ஆண்டவரே ', என்று அழைத்தபோது
"நீதியின் கடவுள் எங்கே" என்று கேட்டபோது
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

7. "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்" என்பதில் தூதர் யார்?
எலியா
எலிசா
இயேசு
பவுல்
மேற்கூறிய எதுவும் இல்லை

8. எவ்வாறு ஆண்டவரை கொள்ளையடித்தார்கள்?
பத்திலொரு பங்கிலும்
காணிக்கையிலும்
பலிகளிலும்
மேற்கூறிய அனைத்தும்
A & B

9. நினைவு நூல் ஒன்று யாருக்காக எழுதப்பட்டது?
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கிறவர்களுக்கும்
ஆண்டவரிடம் ஜெபித்தவர்களுக்கும்
அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கும்
A & B்
A & c

10. ஆணவக்காரர் கொடுமை செய்வோர்க்கு என்ன நேரும்?
எரிந்து சருகாவர்
கொல்லப்படுவார்
மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டார்கள்
தொழுநோயால் வதைக்கப்பட்டார்கள்
மேற்கூறிய எதுவும் இல்லை

11.ஆண்டவருடைய பெயருக்கு அஞ்சி நடக்கிறவர்கள் மேல் யார் எழுவார்?
விடிவெள்ளி
வைகறை விடிவெள்ளி
பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர்
மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும்
மேற்கூறிய எதுவும் இல்லை

12. பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடம் திருப்புவது யார்?
இயேசு
திருமுழுக்கு யோவான்
பவுல்
பேதுரு
மேற்கூறிய எதுவும் இல்லை

Qns 13, 14, 15 from Zechariah (செக்கரியா)

13. ஆண்டவரைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது?
அந்நாளில் ஆண்டவர் ஒருவர் மட்டுமே இருப்பார்: அவர் திருப்பெயர் ஒன்று மட்டுமே இருக்கும்.
ஆண்டவர் உலகம் அனைத்திற்கும் அரசராய்த் திகழ்வார்
ஆண்டவர் பெரியவர், புகழப்பட வேண்டியவர்
மேற்கூறிய அனைத்தும்
A & B

14. எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுத்த எல்லா மக்களினங்களையும் ஆண்டவர் எப்படி வதைப்பார்?
அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவனது சதையும் அழுகிப்போகும்.
அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகிப்போகும்
நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகி விடும்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

15. குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் என்ன இருக்கும்?
ஆண்டவருக்கென அர்ப்பணிக்கப்பட்டவை என்று எழுதப்பட்டிருக்கும்
ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள் ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்
எல்லாம் வல்ல இறைவன்
மேற்கூறிய எதுவும் இல்லை





Free counters!