Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 6 (ஜூன் 2015)
வேதாகமப் பகுதி : லேவியர் 11 முதல் 27 வரை

1. குரு தன் கடவுளுக்கு ஏற்ற தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும்.ஏன் ?
ஏனெனில் அவர்கள் மக்கள் சார்பாக கடவுளுக்கு உணவு படைக்கிறார்கள்
ஏனெனில் ஆண்டவரின் பலியான தங்கள் கடவுளின் அப்பத்தை செலுத்துவதால்
ஏனெனில் தங்கள் கடவுளின் பெயரைக் கெடுக்காமல் இருப்பதற்காக.

2. . இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக விரும்பும்போது எல்லாம் வரக்கூடாது என்று யார் யாரிடம் கூறிய வார்த்தை
ஆரோன் தன் புதல்வரிடம்
மோசே ஆரோனிடம்
ஆண்டவர் மோசேயிடம்

3. நிலத்தில் செறிந்திருக்கும் ஊர்வனவற்றில் தீட்டானவை எவை?
முயல்
சுண்டெலி
பன்றி

4. சிந்திக் கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமல் அதை எளியவருக்கும் அன்னியருக்கும் விட்டுவிட வேண்டும் என்று ஒரேமாதிரியான வசனம் எந்தெந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்?
23 : 22 மற்றும் 19 : 10
23 : 10 மற்றும் 23 : 22
25 : 5 மற்றும் 19 : 10

5. உங்களில் ஒருவரும்,அன்னியரும் இதை ஒருபோதும் அருந்தவேக்கூடாது.எதை ?
பறவையின் குருதி
ஆடு,மாடு,வெள்ளாடுகளின் குருதி
குருதி ( இரத்தம் )

6. ஒரு பெண், கருத்தரித்து ஆண் குழந்தை பெற்றால் எத்தனை நாள் தீட்டுபட்டிருப்பாள் ?
33 நாள்கள்
7 நாள்கள்
14 நாள்கள்

7. ____________________ இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் ____________________
தூயோராய், தூயவர்
தூயவர்,தூயோராய்
அஞ்சி, தூயவர்

8. தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால் அவர்களை குருவானவர் சோதித்து என்ன என அறிவிப்பார்?
தூய்மையானவர்
தொழுநோயாளி
தீட்டுள்ளவர்

9. குறி சொல்லும் அல்லது மை போட்டுப் பார்க்கும் எந்த ஆணும் , பெண்ணும் எதனால் கொல்லப்படவேண்டும்?
அடித்துக் கொல்லப்படவேண்டும்
கல்லால் எறிந்து கொல்லப்படவேண்டும்
மன்னிக்கப்படவேண்டும்

10. ஒரு வீட்டில் தொழுநோயை ஆண்டவர் வரச்செய்தால் அந்த வீட்டின் கறையை நீக்க வேண்டிய சட்டம் என்ன ?
வீட்டிலுள்ள அனைத்தையும் வெளியேற்ற வேண்டும்
வீட்டை ஏழுநாள் அடைத்து வைக்க வேண்டும்
ஊற்று நீரில் கொல்லப்பட்ட குருவியின் குருதியை வீட்டின்மேல் ஏழு தரம் தெளிக்க வேண்டும்

11. எதை விடியும் வரை உன்னிடம் இருத்தல் ஆகாது என்று ஆண்டவர் கூறுகிறார்?
பலி கொடுத்த உணவு
வேலையாளின் கூலி
ஆண்டவருக்கென்று படைக்கப்பட்டவை

12. ஒரு கன்று,செம்மறி,அல்லது வெள்ளாட்டுக்குட்டி பிறந்தால் எத்தனை நாள் தன் தாயிடம் இருந்து பின் ஆண்டவருக்கு எரிபலியாக செலுத்தப்பட வேண்டும்?
7 நாள்கள்
14 நாள்கள்
8 நாள்கள்

13. அருள் பொழிவு செய்யப்பட்டு, தன் தந்தைக்குப் பின்னர் குருவாக நியமனம் பெற்றவன் எதை நிறை வேற்றவேண்டும்?
குருக்களுக்காக பாவக்கழுவாய்(பாவநிவிர்த்தி) நிறைவேற்றுவான்
தூயகத்திற்காக பாவக்கழுவாய்(பாவநிவிர்த்தி) நிறைவேற்றுவான்
எல்லோருக்கும்,எல்லாவற்றிக்கும் பாவக்கழுவாய்(பாவநிவிர்த்தி)நிறைவேற்றுவான்

14. ஆண்டவரின் நியமங்களைக் கவனமாய்க் கைக்கொண்டு கட்டளைகளை நிறைவேற்றி நடந்தால் ஏற்ற காலத்தில் என்னென்ன தருவார்?
(தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்) மழையை கட்டளையிடுவார்
வயல் தன் பலன்களைக் கொடுக்கும்
கானான் நாட்டை உங்களுக்கு கையளிப்பேன்
நீங்கள் விரும்பியவற்றை நாட்டில் நலமாக வாழ்வீர்கள்
பழ அறுவடை பயிர் விதைப்பு வரை இருக்கும்

15. . யூபிலி ஆண்டின் சிறப்புகள் யாவை? (தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்)
50 ம் ஆண்டு யூபிலி ஆண்டு
நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை கிடைத்த ஆண்டு
விதை விதைத்து அறுவடை செய்யும் ஆண்டு
உங்களுக்கு தூயது ஆண்டு
தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய ஆண்டு




Free counters!