Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 7 (ஜூலை - 2015 )
வேதாகமப் பகுதி : எண்ணிக்கை (எண்ணாகமம்) 1 லிருந்து 18ம் அதிகாரம் வரை

1. உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அறியனையிலிருந்து பேசிய குரல் யாருடையது?
மோசே
ஆண்டவர்
லேவியர்

2. இஸ்ரேயேல் கோத்திரங்களில் போருக்கு போகத்தக்கதாக எண்ணப்பட்ட ஆண்களின் தொகை எந்த குலத்தில் அதிகமாக இருந்தது?
யூதா குலம்
தாண் குலம்
செபுலோன் குலம்

3. எங்களுக்கு நீ கண்களாயிருப்பாய் என்று யார் யாரிடம் கூறியது?
இரகுவேல் கோபாபிடம்
மோசே ஆண்டவரிடம்
மோசே கோபாபிடம்

4. ஆண்டவர் ஆரோனை நோக்கி நாட்டில் உனக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை,அவர்களிடையே உனக்கு பங்குமில்லை என்று ஏன் கூறினார் ?
ஏனென்றால் இஸ்ரயேல் மக்களிடையே உனக்குப் பங்கும் உரிமைச்சொத்தும் நானே என்று கூறினார்.
ஏனென்றால் படைக்கும் படையலின் பத்தில் ஒன்றை நான் உரிமை சொத்தாக கொடுப்பேன் என்று கூறினார்
ஆண்டவருக்கு உயர்த்தி படைக்கும் புனிதப் படையல்கள் அனைத்தையும்,உன் புதல்வர்,புதல்விக்கு நியமமாக தருகிறேன் என்று கூறினார்

5. என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா?என்று மோசே யாரிடம் கூறினார்?
ஆரோன்
எல்தாது
யோசுவா

6. நாசீர் விதியின்படி கடவுளுக்கு தன்னை அர்பணித்துக்கொண்டதின் அடையாளம் எங்கே இருக்கிறது?
இதயத்தில்
தலையில்
கைகளில்

7. திருவுறைவிடத்துக்குப் பின்னால் மேற்கே பாளைய மிறங்க வேண்டியவர்கள் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்?
கேர்சோன் குடும்பம்
மெராரி குடும்பம்
கோகாத்து குடும்பம்

8. இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புக்களை ஒழிக்க ஆண்டவர் என்ன செய்தார்?
இஸ்ரயேல் மக்களிடம் மோசே மூலம் பேசினார்
தான் தெரிந்துக்கொண்ட ஆரோனின் கோலை துளிர்விடும்படி செய்தார்
திருவுறைவிடத்தை நெருங்கி வருகிற எவனும் செத்து போகும்படி செய்தார்

9. கானான் நாட்டை உளவுப்பார்க்க சென்றவர்கள் எத்தனை நாட்கள் கழித்து திரும்பி வந்தனர்?
40 நாட்கள்
35 நாட்கள்
50 நாட்கள்

10. சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு மெராரியர் குடும்பத்தில் எண்ணப்பட்டோர் எத்தனை பேர்கள்?
2630 பேர்கள்
2750 பேர்கள்
3200 பேர்கள்

11. ஓய்வு நாளில் விறகு பொறுக்கிய மனிதனை முதலில் என்ன செய்தார்கள்?
காவலில் வைத்தனர்
கல்லால் எறிந்தனர்
பாளையத்துக்கு வெளியே துரத்திவிட்டனர்

12. முதல் மாதம் பதினான்காம் நாள் பாஸ்கா கொண்டாட முடியாமல் போனவர்கள் பிறகு எந்த நாளில் கொண்டாட வேண்டும்?
இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் காலைப்பொழுதில்
இரண்டாம் மாதம் பதினான்காம் நாள்
எல்லா விதிமுறைகளின்படி கொண்டாட வேண்டும்

13. பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே எவ்வாறு திகழ்ந்தார்?
சாந்தமிகு மானிடராய்
நம்பிக்கையுள்ளவராய்
உண்மையுள்ளவராய்.

14. மோசேயும்,ஆரோனும்,இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் முழுவதற்கும் முன்பாக முகங்குப்புற விழுந்ததன் காரணம் என்ன?
மக்கள் முறையிட்டதால்
ஆண்டவரை நம்பாததால்
எகிப்திற்கே திரும்பி செல்வோம் என்றதால்

15. கோராகு,தாத்தான்,அபிராம்,ஆகியோருக்கு ஆண்டவர் அளித்த தண்டனை என்ன?
தரை தன் வாயைத் திறந்து அவர்களையும்,அவர்களுடைய எல்லா உடைமைகளையும் விழுங்கிவிட்டது
ஆண்டவர் புதுமையான ஒன்றை செய்தார்
உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கும்படி செய்தார்.




Free counters!