Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா 79 - July 2021
வேதாகமப் பகுதி : உரோமையர் -6 -10 (Romans 11 - 16 )

1. பவுல் யாரிடம் உங்களுக்கு திருத்தூதராய் இருக்கிறேன் என்று கூறினார் ?
எல்லோரிடமும்
பிற இனத்தாரிடம் 
யூதர்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

2. இஸ்ரயேலரை பவுல்  எந்த மரக்கிளையுடன் ஒப்பிடுகிறார் ?
அத்திமரம்
கோபர்மரம்
ஒலிவமரம்
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

3. சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன். கடவுளுக்கு உகந்த தூய ______ பலியாக உங்களை படையுங்கள்
தெய்வீக
உயிருள்ள
சரியான
உண்மையான
மேற்கூறிய எதுவும் இல்லை

4. கடவுள் ஒவ்வொருவரும், தம்மை எப்படி மதித்து கொள்ளட்டும் என்று கூறினார்
மிகுதியான கருணையோடு
நீதியோடு
நம்பிக்கையின் அளவுக்கேற்ப
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

5. முடிந்தவரை எல்லாரோடும் எப்படி வாழ வேண்டும் ?
பக்தியுடன்
அமைதியுடன்
நேர்மையாக
அன்புடன்
சாமர்த்தியமாக

6. ஆளும் அதிகாரிகளுக்கு நீங்கள் என்ன செலுத்த வேண்டும்
தலைவரி
சுங்கவரி
மரியாதை
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

7. திருச்சட்டத்தின் நிறைவு என்ன ?
கீழ்ப்படிதல்
நம்பிக்கை
அன்பு
இரக்கம்
பொறுமை

8. என்ன நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் ?
சாத்தான்
ஊனியல்பின்
கீழ்ப்படியாமை
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

9. சில கிறிஸ்தவர்கள் எந்த விஷயங்களில் வேறுபட்டனர்?
ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்தது என
தங்கள் உடை நெறிமுறைகளில்
எல்லாவகை உணவையும் உண்போர்
மேற்கூறிய அனைத்தும்
A & C

10. இறையாட்சி என்பது நாம் உண்பதையும் , குடிப்பதையும் அடிப்படியாக கொண்டதல்ல. மாறாக தூய ஆவி ஆளும் நீதி , அமைதி, _______ ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டது  
நம்பிக்கை
மகிழ்ச்சி
சுதந்திரம்
வாழ்க்கை
வெற்றி

11. எது பாவம் என்று கருதப்படுகிறது?
இறைச்சி உண்பது
உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம்
ஓய்வுநாளை  கடைபிடிக்காதது  
மேற்கூறிய அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை

12. பவுல் எந்த நாட்டிற்கு போகும்போது எருசலேம் மக்களை காண வரவேண்டும் என்று பல ஆண்டுகளாகவே ஏங்கி கொண்டிருந்தார்கள் ?
அக்காயா
கப்படோஸியா
லிபியா
மாசிதோனியா
ஸ்பெயின்

13. பவுல் ஏன் ஜெருசலேம் போனார் ?
இறைமக்களுக்கு  செய்யப்பட வேண்டிய  பொருளுதவியை முன்னிட்டு 
விடுதலையை கொண்டாட
பிற அப்போஸ்தலரை கவனிக்க
விருத்தசேதனம் பற்றி விவரிக்க
மேற்கூறிய எதுவும் இல்லை

14. யார் கெங்கிரேயா சபையில் திருத்தொண்டராய் இருந்து பலருக்கு உதவி செய்து பவுலுக்கு உதவி செய்திருக்கிறார் 
ஜூலியா
ஜூனியா
பெயிபா
ப்ரஸில்லா
டிரைபோஸா

15. இந்த திருமுகத்தை எழுதி கொடுத்து ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் வாழ்த்து கூறியவர் யார்  ?
அம்பிலியஸ்
ஜூலியா 
சாடிஸ் 
தெர்த்தியு
உர்பாணி 





Free counters!