Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 8 (ஆகஸ்ட் - 2015 )
வேதாகமப் பகுதி : எண்ணிக்கை (எண்ணாகமம்) 19 லிருந்து 36ம் அதிகாரம் வரை

1. கண் திறக்கப்பட்டவனின் திருமொழி என்று எத்தனை இடத்தில் வாசிக்கிறோம்?
3 இடத்தில்
1 இடத்தில்
2 இடத்தில்

2. மனிதப் பிணத்தை தொட்டபின் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள செய்ய வேண்டிய காரியம் என்ன?
மூன்றாம் நாளில் தன்னைத் தண்ணீரால் தூய்மை செய்ய வேண்டும்
அந்த ஆள் இஸ்ரேலிடமிருந்து விலக்கப்பட வேண்டும்
தீட்டுக் கழிக்கும் தண்ணீர் அவன்மேல் ஊற்றப்பட்டபின் அவன் தன்னைத் தூய்மைபடுத்துகிறான்

3. ஓர் மலையில் ஆரோன் இறந்த பொழுது அவன் வயது என்ன?
120 வயது
123 வயது
121 வயது

4. இஸ்ரயேல் மக்களுக்கு கொடுக்க இருக்கும் தேசத்தில், ஆரோன் நுழையப் போவதில்லை என்று ஆண்டவர் ஏன் சொன்னார்?
மெரிபாவின் தண்ணீர் அருகில் ஆண்டவரின் கட்டளையை மீறியதால்
ஆரோன் ஆண்டவருக்கு கீழ்படியாததால்
ஆண்டவர் ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவனுடைய மகன் எலெயெசருக்கு உடுத்த நினைத்ததால்

5. பினகாசு இஸ்ரயேல் மக்களிடமிருந்து என் சினத்தை அகற்றி விட்டதால் அவனோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். அது என்ன உடன்படிக்கை?
அவன் என்மீது பேரார்வம் கொண்டதால் இஸ்ரயேல் மக்களுக்கு கறை நீக்கம் செய்வான்
அவன் என் சினத்தை அகற்றிவிட்டதால் நானும் அவனுக்காக இஸ்ரயேல் மக்களை முற்றிலும் அழிக்கமாட்டேன்.
அவனுக்கும்,அவன் வழித்தோன்றலுக்கும் நிலையான குருத்துவத்தின் உடன்படிக்கையை தருவேன்

6. நீங்கள் வாழும் நாட்டை தீட்டுப்படுத்தாதீர்கள்.இரத்தம் நாட்டையே தீட்டுப்படுத்தும்.? ஏன்?
நீங்கள் வாழும் நாட்டை நீங்கள் கரைப்படுத்துவே கூடாது
நான் அதின் நடுவில் வாழ்கிறேன்.நானே இஸ்ரயேல் மக்கள் நடுவில் வாழும் ஆண்டவர்.
சிந்தப்பட்ட இரத்தத்திற்காக அதனை சிந்தினவனின் இரத்தமே ஈடு செய்ய முடியும்

7. ஆண்டவர் பிலயாமின் வாயில் தமது வார்த்தையை வைத்து பாலாக்கிடம் சொல்லச் சொன்னது என்ன? (தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்)
கடவுள் சபிக்காதவனை நான் எப்படி சபிப்பேன்.
யாக்கோபுக்கு எதிராக மந்திரமும்,இஸ்ரயேலுக்கு எதிராக குறி சொல்லுதல் இல்லை
ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்
பொய் சொல்வதற்கு கடவுள் மனிதர் அல்லர்
மனதை மாற்றிக்கொள்ள கடவுள் மனிதப் பிறவியும் அல்லர்.

8. இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும்,மோசேக்கும் எதிராக என்னென்ன பேசினார்கள்? (தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்)
பாலை நிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்?
இங்கு உணவுமில்லை,தண்ணீரும் இல்லை
நாங்கள் பாவம் செய்துவிட்டோம் என்றனர்
அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துவிட்டது

9. 64,400 பேர்கள் என்று எண்ணப்பட்ட குடும்பம் எது?
தாண் குடும்பம்
இசக்கார் குடும்பம்
செபுலோன் குடும்பம்

10. உரிமைச் சொத்துக்காக உங்களுக்கு நாட்டை பங்கிட்டுத் தருவோரின் பெயர்களாவன
மோசே,யோசுவா
குரு எலயாசர்,நூனின் மகன் யோசுவா
எப்புன்னேயின் மகன் காலேப்,செமுவேல்

11. ஒருவன் மகனே இல்லாமல் இறந்துவிட்டால் அவன் உரிமைச் சொத்து யாரைச் சேர வேண்டும்?
இறந்தவனின் சகோதரருக்கு சேர வேண்டும்
தந்தையின் சகோதரரை சேர வேண்டும்
மகளுக்கு சேர வேண்டும்

12. நீர் மூன்று முறை இவ்வாறு அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?இது யாருடைய கூற்று?
கழுதை
பிலெயாம்
பாலாக்கு

13. மனைவியின் பொருத்தனையை அவள் கணவன் கேட்டபின் அதை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கிவிட்டால் அவளின் பொருத்தனைக்கு யார் பொறுப்பாளர்?
தந்தை
மனைவியே
கணவன்

14. போருக்குச் சென்றிருந்த படைவீரரிடமிருந்த ஆள்கள்,மாடுகள், கழுதைகள்,மந்தைகள் ஆகியவற்றில் ஆண்டவருக்குரிய பங்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்?
ஐந்நூற்றில் ஓன்று
ஐம்பதுக்கு ஒன்று
பத்தில் ஒரு பங்கு.

15. ஆண்டவர் தங்களுக்கு கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்? இது யார் சொன்னது?
யோசுவா
மோசே
குரு எலயாசர்




Free counters!