Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 9 (செப்டம்பர் - 2015 )
வேதாகமப் பகுதி : இணைச்சட்டம் 1 லிருந்து 17 வரை

1. மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துக்கொண்டார். ஏன் ?
எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதால்
எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்கள் என்பதால்
உங்களிடம் அன்பு கூர்ந்ததாலும், மூதாதையருக்கு ஆணையிட்டு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதால்

2. மனிதர் _____________ மட்டுமன்று , மாறாக கடவுளின் ____________ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார்.
அப்பத்தினால், வாய்ச்சொல்
வாய்ச்சொல், கட்டளை
மன்னாவால், வாய்ச்சொல்

3. கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட _____________ உங்களைப் பெருகச் செய்வாராக!
100 மடங்கு
1000 மடங்கு
10 மடங்கு

4. உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத்தெய்வ வழிப்பாட்டை _____________ கடவுள்
சகிக்காத
விரும்பாத
வெறுக்கிற

5. இரத்தத்தை நீங்கள் அருந்த வேண்டாம்..தண்ணீரை ஊற்றுவது போல அதை தரையிலே ஊற்றிவிடுங்கள். ஏன் ?
சதையோடு இரத்தத்தை சேர்த்து உண்ணக்கூடாது என்பதால்
இரத்தத்தை ஆண்டவரின் பீடத்திலே ஊற்றிவிடுவதால்
இரத்தமே உயிர் என்பதால்

6. _____________ ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார்
70 ஆண்டுகள்
430 ஆண்டுகள்
40 ஆண்டுகள்

7. உண்ணத்தகும் விலங்குகள் எவை ? எவை ? என்று வாசிக்கிறோம். (தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்)
மாடு
ஒட்டகம்
வெள்ளாடு
காட்டுமான்
சிறகும் செதிலும் உள்ள விலங்குகள்

8. அரசனுக்கான விதிமுறைகள் எவை ? எவை ?
   1. ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்த வேண்டும்.    2. உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்த வேண்டும்.    3. மீண்டும் மக்களை எகிப்துக்கு போகச் சொல்லாத ஒருவனையே அரசனாக ஏற்படுத்த வேண்டும்.    4. ஆண்டவரை விட்டு விலகாத இதயம் உடையவனையேஅரசனாக ஏற்படுத்த வேண்டும்.    5. வெள்ளியும்,பொன்னும் அளவுமீறிச் சேர்க்காதவனையேஅரசனாக ஏற்படுத்த வேண்டும். 1,2,3,4
1,3,5
1,2,3,4,5
2,4, 5
1,5

9.யோர்தானுக்கு கிழக்கே குறிக்கப்பட்ட அடைக்கல நகர்கள் எத்தனை ?
3
6
12

10. என்மீது அன்புக் கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு _______________ தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.
10 தலைமுறை
1000 தலைமுறை
3 தலைமுறை

11. ஒரு ஆண்டில் எத்தனை முறை உன் ஆண்மக்கள் அனைவரும் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும்
3 முறை
6 முறை
5 முறை

12. அவர்களைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுதியான மக்களினமாக உன்னை ஆக்குவேன். இது யார் கூற்று ?
மோசே
ஆரோன்
ஆண்டவர்

13. அரக்கர்களில் பாசானின் மன்னனாகிய ஒகுவின் இரும்புக் கட்டில் எத்தனை முழ நீளமும், எத்தனை முழ அகலமும் கொண்டது என்று வாசிக்கிறோம்
9,4
8,7
6,4

14. லேவியர்களின் உரிமைச் சொத்து யார் ?
அவர்கள் சகோதரர்களே
இஸ்ரயேலர்
ஆண்டவரே!

15. உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கண்காணிக்கும் நாடு! கண்காத்திடும் நாடு எது ?
மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த நாடு
பாலும், தேனும் நிறைந்து வழியும் நாடு
வானத்தின் மழைநீரையே குடிக்கும் நாடு




Free counters!